Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோககோலா நிறுவனத்திற்கு தாக்கீது!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (13:16 IST)
பாலின அடிப்படையில் பாகுபாடு செய்ததாகவும், பணிக்காலத்தில் தன்னை துன்புறுத்தியதாகவும் முன்னாள் கோககோலா பெண் ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

பயால் சாவ்லா சிங் என்ற பெண் ஊழியர் கோககோலா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்தில் பணியாற்றிய காலங்களில் குறிப்பாக கர்ப்ப காலத்தில் மூத்த அதிகாரிகள் இவரை துன்புறுத்தியதாகவும், அவருடைய பணித் திறனை வேண்டுமென்றே குறைத்து இழிவு படுத்தியதாகவும் இதன் மூலம் வேலையை விட்டே செல்லுமாறு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் வேறு நிறுவனத்தில் பணியாற்றியபோதும் தொடர்ந்து தொந்தரவுகளை அளித்ததால் அந்த வேலையிலிருந்தும் பாயல் சாவ்லா சிங் ராஜினாமா செய்ய நேர்ந்துள்ளது.

இதனால் உச்ச நீதிமன்றத்தில் இழப்பீடு கோரியும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியும் இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அகர்வால் தலைமையிலான நீதிக் குழு முன் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து கோககோலா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments