Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய அணை கட்டப்படும் : ஆளுநர் உரையில் கேரளா!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (13:22 IST)
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதியதொரு அணை கட்டப்படும் என்று கேரள சட்டப் பேரவையில் உரை நிகழ்த்திய அம்மாநில ஆளுநர் ஆர்.எல். பாட்டியா கூறியுள்ளார்!

கேரள சட்டப் பேரவையில் நிதிநிலை கூட்டத் தொடரின் துவக்க நாளான இன்று, பேரவையில் அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றிய ஆளுநர் ஆர்.எல். பாட்டியா, "பலவீனமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையினால் ஏற்படக்கூடிய பிரச்சனைக்குத் தீர்வாக புதிய அணை கட்டப்படும்" என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்றும், அதன் நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும், அணை பலவீனமாக உள்ளது என்று தொடர்ந்து கூறிவரும் கேரள அரசு, தற்பொழுது அதற்கு மாற்றாக புதிய அணை கட்டுவதை ஆளுநர் உரையிலேயே கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Show comments