Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - சர்வதேச அணு சக்தி முகமை பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (19:43 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் அணு உலைகளை கண்காணிப்பது தொடர்பாக தனித்த உடன்படிக்கை ஏற்படுத்த சர்வதேச அணு சக்தி முகமையுடன் (IAEA) இந்தியா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை!

இத்தகவலை சர்வதேச அணு சக்தி முகமை வட்டாரங்கள் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

இந்தியா, அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தின் படி, சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் அணு சக்தி உலைகள், அவைகளின் வாழ்நாள் முழுவதும் இயங்குவதற்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை இருப்பில் தேக்கி வைத்துக் கொள்வதை சர்வதேச அணு சக்தி முகமை ஏற்காததையடுத்து, கண்காணிப்பு உடன்படிக்கை இறுதி செய்யப்படவில்லை என்று அச்செய்தி கூறுகிறது.

இதுமட்டுமின்றி, அணு உலைகளுக்கு அளிக்கப்படும் யுரேனியம் எரிபொருள் நிறுத்தப்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, சர்வதேச அணு சக்தி முகமையுடன் மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது இந்திய அணு சக்தித்துறை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments