Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அரசை அகற்றுங்கள்-பூரி சங்கராச்சார்யார் வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (12:45 IST)
கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறைக்குக் காரணமான நரேந்திர மோடி அரசை மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து அகற்றிட வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீய, நியாயமற்ற நடவடிக்கைகளுக்க நரேந்திர மோடி அரசை அகற்றிட வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள பூரி சங்கராச்சாரியார் சாமி அதோக்ஷானந்த் தேவ் தீர்த்தா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு சமூக நல்லிணக்கத்தை கெடுத்ததன் மூலம் நரேந்திர மோடி அரசு இந்து சமுதாயத்தினரை வெக்கி தலைகுனிய வைத்துவிட்டது என்றும், மோடி அரசின் தீய நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தன்னை வளர்ச்சியின் நாயகன் (விகாஸ் புருஷ்) என்றும், இந்துக்களின் நலன் காப்பவராகவும் மோடிக் கூறிக் கொண்டது பொருளற்றதாகி விட்டது என்று அதோக்ஷானந்த் தேவ் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலப் பிரச்சினையில் மோதிக் கொண்டது போல மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றை ஒன்றை எதிர்த்துக் கொள்ளாமல் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்யும் மாபெரும் சவாலை ஒன்றிணைந்து ஏற்று அகற்றி ஜனநாயகக் கோயிலை காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள சுவாமி அதோக்ஷானந்த், மோடி அரசின் தவறான கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் அவர்கள், வெளிப்படையாக வெளியே வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வளவு தவறுகளைச் செய்ததற்குப் பிறகும், மோடி அரசு ஐந்தாண்டு காலம் நீடித்தது மிக துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ள அவர், மோடி அரசின் திசைதிருப்பலில் மயங்கிவிடாமல் அதனை அகற்றுவதற்கான வாய்ப்பை குஜராத் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments