Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் ‌மீது உ‌ரிமை ‌மீற‌ல் ‌பிர‌‌ச்சனை!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (11:48 IST)
மா‌நில‌ங்களவை‌யி‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ மீதா ன ‌ விவாத‌த்‌தி‌ன ் போத ு ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த் த கரு‌த்துகளு‌க்கா க, அவ‌ர ் ‌ மீத ு ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர ் ய‌ஷ்வ‌ந்‌த ் ‌ சி‌ன்ஹ ா உ‌ரிம ை ‌ மீற‌ல ் தா‌க்‌கீத ு கொடு‌த்து‌ள்ளா‌ர ்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பிறகு இப்பிரச்சனையை சின்ஹா கொண்ட ு வந்தார். அப்போது அவைத் தலைவர் பொறுப்பில் இரு‌ந்த பேரா‌சி‌ரிய‌ர் பி.ஜே.குரியன், சின்ஹா அளித்த தா‌க்‌கீது அவைத் தலைவ‌ரி‌ன் ஆய்வில் இருப்பதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நடைபெற்றபோத ு, "1991- ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா இருந்தபோது ஜப்பானுக்குச் சென்றார். ஆனால் அவரால் ஜப்பான் நிதியமைச்சரைக் கூட சந்திக்க முடியவில்லை,'' என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த விளக்கம் உண்மைக்கு மாறானது என்று கு‌றி‌ப்‌பி‌ட்ட யஷ்வந்த் சின்ஹா, தவறான தகவலை அ‌ளி‌த்த பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதாக கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments