Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'எல்லா மொழிகளையும் மதிக்கிறோம்': மத்திய அரசு!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (17:28 IST)
உச்ச நீதிமன்றம ், உயர் நீதிமன்றங்களில் ஹிந்தியை மட்டுமே அலுவலக மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையின் இறுதி முடிவு மத்திய அரசிடம்தான் உள்ளது. நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறாம ்' என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார ்.

மக்களவையில் இன்று உச்ச நீதிமன்றம ், உயர் நீதிமன்றங்களில் ஹிந்தியை மட்டுமே அலுவலக மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையை எதிர்த்து தமிழக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

அவர்களை அமைதிப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷ ி, '' ஒவ்வொரு குழுவிற்கும ், ஆணையத்திற்கும் பிரச்சனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும் உரிமை உள்ளது. அவற்றின் மீது இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.

தமிழ ், ஹிந்தி உள்பட எல்லா மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். பிரச்சனைக்குரிய பரிந்துரை தற்போது சட்ட ஆணையத்தின் ஆய்வில் உள்ளது. மத்திய அரசிடம் வரும்போது நல்ல முடிவு எடுக்கப்படும ்'' என்றார்.

அமைச்சரின் இந்த பதிலுக்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட எல்லா தமிழக உறுப்பினர்களும் மேசைகளைத் தட்டி வரவேற்பளித்தனர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments