Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011-ல் அணுமின் உற்பத்தி இருமடங்காக உயரும்: மத்திய அரசு!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (17:19 IST)
நமது நாட்டில் தற்போது 4,120 மெகாவாட்டாக உள்ள அணுமின் உற்பத்தி 2011 ஆம் ஆண்டில் 7,280 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிரித்விராஜ் செளகான ், நமது நாட்டில் நடந்து வரும் அணு உலை கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டிற்குள் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

'' நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 3 விழுக்காடு அணுசக்தியால் உற்பத்தியாகிறது.

வளர்ந்த நாடுகளில் அணுமின் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. பிரான்சில் 78 விழுக்காட ு, ஜெர்மனியில் 32 விழுக்காட ு, ஜப்பானில் 30 விழுக்காட ு, கொரியாவில் 39 விழுக்காட ு, பிரிட்டனில் 18 விழுக்காடு என்றவாறு மின் உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு உள்ளது.

இந்தியாபோன்ற வளர்ந்துவரும் நாடுகளான பிரேசிலில் 3 விழுக்காட ு, சீனாவில் 2 விழுக்காடு மின் உற்பத்தி மட்டுமே அணுசக்தியால் பெறப்படுகிறத ு'' என்று அவர் தனது பதிலில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments