Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன: மத்திய அரசு!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (19:59 IST)
கடந்த 21 ஆம் தேதிவரை மரண தண்டனை பெற்ற 28 கைதிகளின் கருணை மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ராதிகா செல்வி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில ், தமிழகத்தைச் சேர்ந்த ஆர். கோவிந்தசாம ி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஸ ், ரவீந்தர ், சுரேஷ ், பிரகாஷ ், ஷெ ராம ், ஷியாம் மனோகர் ஆகியோரின் கருணை மனுக்கள் 1998 ஆம் ஆண்டிலும ், நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளியான முகமது அப்சலின் கருணை மனு 2006 ஆம் ஆண்டிலும ், ஹரியானாவைச் சேர்ந்த சோனிய ா, சஞ்சீவ் ஆகியோரின் கருணை மனுக்கள் இந்த ஆண்டும் பெறப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நமது நாட்டின் பல்வேறு சிறைகளில் மொத்தம் 3,45,648 பேர் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments