Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌ல் 17 அமை‌ச்ச‌ர்க‌ள் பத‌வி ‌விலக‌ல்!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (10:12 IST)
ஒ‌ப்ப‌ந்த கால‌ம் முடி‌ந்து ப‌த‌வியை ‌வி‌ட்டு ‌முதலமை‌ச்‌ச‌ர் குமாரசா‌மி விலகாததா‌ல் ப ா.ஜ. ம‌ந்‌தி‌ரிக‌ள் 17 பே‌ர் நே‌ற்று பத‌வி ‌வில‌கின‌ர். இதனால் கர்நாடக அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

கர்நா டகா‌வி‌ல் தேவேகவுடா தலைமையிலான ஜனதாதளம் (எஸ்)- பா ர‌திய ஜனதா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமை‌ச்சராக த ே வகவுடாவின் மகன் குமாரசாமி இரு‌ந்து வரு‌கிறா‌ர்‌.

முதல் 20 மாதங்கள் குமாரச ா‌மி முத‌ல்வராகவு‌ம ், அடுத்த 20 மாதங்கள் ப ா.ஜ.வை சேர்ந்தவர் முத லமை‌ச்சராக இருப்பது என்றும் ஒப்பந்தம் செய ் யப்பட்டது. அதன்படி, குமாரசாமி முத லமை‌ச்சராக பதவி ஏற்று இன்றுடன் (3 ஆ‌ம் தேதி) 20 மாதங்கள் நிறைவடைவதால் அவர் ஆட்சியை ப ா.ஜ.‌வ ிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர் ஆட்சியை ஒப்படைக்க விரும்பவில்லை.

இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதுகுறித்து நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌‌த்தை‌யி‌‌ல் ‌தீ‌ர்வு காண‌ப்பட‌வி‌ல்லை. நேற்று மாலைக்குள் குமாரசாமி முத லமை‌ச்ச‌ர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எடிய ூரப்பா முதல ்வ‌ர் பதவி ஏற்க வகை செய்யும் ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை மாநில கவர்னரிடம் கொடுக்க வேண்டும் என்று ப ா.ஜ. கெடு விதித்து இருந்தது. இ‌ந்த கெடுவை குமாரசா‌‌மி ‌நிராக‌ரி‌த்து ‌வி‌ட்டா‌ர்.

'' தான் அவசரப்பட்டு பதவி விலக விரும்பவில்ல ை'' என்று கூறிய குமாரசா‌‌‌ம ி, காஷ்மீரில் இதேபோல் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியை காங்கிரசிடம் ஒப்படைக்க 3 மாதங்கள் தாமதம் ஆனதையும் சுட்டிக் காட்டினார். பா.ஜ.க. மந்திரிகள் பதவி விலகினால் அவர்களை தான் தடுத்து நிறுத்தப் போவது இல்லை என்ற ு‌ம் கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அகில இந்திய ப ா.ஜ. த ுணைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அ‌ந்த க‌ட்‌சி‌யி‌ன் அமை‌ச்‌ச‌ர்க‌ள் மற்றும் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் நேற்று மாலை பெங்கள ூரு‌‌ரி‌ல் அ வச ரமாக கூடி ஆலோசனை நடத்தி ன‌ர ். இ‌ந்த கூட்டத்தில், ப ா.ஜ. மந்திரிகள் 17 பேரும் கூண்டோடு ‌ பத‌வி ‌விலகுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, துணை மு த‌ல்வ‌ர் எட ிய ூரப்பா உள்ளிட்ட ப ா.ஜ. மந்திரிகள் அனைவரும் முத லமை‌ச்ச‌ர் குமாரசாமி வீட்டுக்கு சென்று அவரிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். அவற்றை குமாரசாமி பெற்றுக் கொண்டார்.

‌ பி‌ன்ன‌ர் வெளியே வந்த எடிய ூரப்பா செ‌ய்‌தியாள‌ர்கள‌ி‌ட‌ம் கூறுகை‌யி‌‌ல், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் அரசியல் விவகார குழு 5 ஆ‌ம் தேதி கூடி முடிவு எடுக்க இருப்பதாகவும் அன்று நல்ல தீர்வு ஏற்படும் என்றும் எனவே அதுவரை கால அவகாசம் அளிக்குமாறு குமாரசாமி தங்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக, கர்நாடக சட்டசபை கலைக்கப்பட்டு இடைத்தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கூற‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments