Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : பணிகள் பாதிப்பு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (19:34 IST)
பாரத ் ஸ்டேட ் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்ட ன.

பாரத அரசு வங்கிக்கு ஏழு துணை வங்கிகள் உள்ள ன. இவை ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிர ா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத ், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர ், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர ், ஸ்டேட் பாங்க் ஆஃப் பிக்கானீர் மற்றம் ஜெய்ப்பூர ், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியால ா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் ஆகியவைகளாகும ்.

இதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிர ா, தவிர மற்ற வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், சென்னை பாரி முனையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் அலுவலகம் முன்பு, வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர், இ.அருணாசலம் செய்தியாளர்களிடம், ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிரா தவிர, மற்ற வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாக கூறினார்.

மேலும் அவர், பாரத் ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகளை இணைக்க மேற் கொண்டுள்ள முடிவால், பொது மக்களுக்கோ, அல்லது இந்த வங்கிகளுக்கோ, அல்லது அதன் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. இந்த இணைப்பால் பாரத ஸ்டேட் வங்கிக்குதான் நன்மை உண்டாகும். இந்த இணைப்பால் துணை வங்கிகளின் பல கிளைகள் மூடப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி கிளையுடன் இணைக்கப்படும். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

வங்கித் தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சிறிய வங்கிகள் தனியாக இயங்கி தாக்கு பிடிக்க முடியாத ு. வெளிநாட்டு வங்கிகள ், தனியார் வங்கிகளுடன் போட்டியிட வேண்டும் என்றால ், அதிகளவு மூலதனம் வேண்டும ். நாடு முழுவதும் கிளைகள் தேவை என்பன போன்ற காரணங்களினால ், பாரத அரசு வங்கியுடன ், அதன் துணை வங்கிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டத ு.

பாங்க் ஆஃப் செளராஷ்டிராவின் இயக்குநர் குழுவும ், பாரத அரசு வங்கியின் இயக்குநர் குழுவும் இந்த இரு வங்கிகளின் இணைப்பிற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள ன. ஆகவே இந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த வேலை நிறுத்தத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments