Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை : 6 மாதத்திற்கு ஒத்திப்போடு - மார்க்சிஸ்ட்!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (16:05 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதை 6 மாத காலத்திற்காவது மத்திய அரசு தள்ளிப் போட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்!

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அமைக்கப்பட்டுள்ள ஐ.மு. - இடது கூட்டணித் தலைவர்களைக் கொண்ட ஆய்வுக் குழு நாளை கூடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரகாஷ் காரத் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்தப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று காரத் கூறியுள்ளார்.

அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம், 123 ஒப்பந்த வரைவு ஆகியவற்றின் மீது தங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகளை விளக்கி இடது கூட்டணி விடுத்த அறிக்கைக்கு விளக்கமாக அரசு நேற்று பதிலளித்துள்ளது.

நாளை டெல்லியில் ஐ.மு. - இடது ஆய்வுக் குழுவின் 2வது கூட்டம் நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments