Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி மோதி 4 பேர் பலி; ஆக்ராவில் பதற்றம், ஊரடங்கு

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (11:30 IST)
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் லாரி மோதி 4 இளைஞர்கள் பலியானதால் கோபமுற்ற மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் அங்கு ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஷாபி பராத் எனும் சமாதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த 4 இஸ்லாமிய இளைஞர்கள் மீது வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. ஆக்ரா நகரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சுபாஷ் செளக் என்ற இடத்தில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.

சம்பவ இடத்திலேயே அந்த 4 இளைஞர்களும் உயிரிழந்தனர். இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள், மகாத்மா காந்தி சாலையில் வந்த பல லாரிகளை தாக்கினர். 10 லாரிகளுக்குத் தீயிட்டனர். பல கடைகளுக்கும் தீ வைத்தனர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த காவலர்கள் மீது கல் வீச்சு நடந்தது. இதனால் காவல்துறையினர் ஆக்ரா நகரின் சில பகுதிகளில் ஊரடங்குப் பிறப்பித்துள்ளனர். தற்பொழுது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments