நடிகர் சல்மான் கான் கைது செய்யப்பட்டார்

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2007 (15:42 IST)
இந்தி நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக விமானத்தில் வந்து இறங்கியதும் காவல்துறையினர் ஜோத்பூரில் அவரை கைது செய்தனர்.

மானை வேட்டை ஆடிய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சல்மான் கான், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த ஜோத்பூர் அமர்வு நீதிமன்றம் அவரது முறையீட்டை நிராகரித்தது மட்டுமின்றி, அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிடி ஆணை பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வந்த சல்மான் கான், ஜோத்பூர் வந்து இறங்கியதும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இன்று மாலைக்குள் அவர் ஜோத்பூர் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளா சம்பவம்!. வீடியோ போட்ட பொண்ணுக்கு 10 வருட சிறை தண்டனை?....

தங்கம், வெள்ளி விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

ஜனவரி 26 முதல் 10 நாள் பிரச்சாரம் செய்ய திட்டமா? எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊர்? விஜய் பயணமா?

என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜிகே வாசன்.. தேமுதிக வந்துவிட்டால் ஆட்சி நிச்சயம்..!

ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சிக்கு எதுக்கு ராஜ்ய சபா சீட்? ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு ராஜ்யசபா சீட் தரக்கூடாதுன்னு சட்டம் வரணும்..!

Show comments