சுதந்திர, செழுமையான ஆசியா : ஜப்பான் பிரதமர் விருப்பம்!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2007 (15:47 IST)
இந்தியாவும், ஜப்பானும் பொருளாதாரத்தில் இருந்து பாதுகாப்பு வரை அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்தி சுதந்திரமும், செழுமையும் மிக்க விரிவான ஆசியாவை உருவாக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறினார்!

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். இந்தியாவும், ஜப்பானும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அடுத்த 3 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்தலாம் என்று கூறினார்.

இந்தியாவின் உள்கட்டமைப்பில், குறிப்பாக டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கட்டா இடையே தனித்த சரக்கு போக்குவரத்து சாலையை உருவாக்குவதில் ஜப்பான் ஒத்துழைப்பு தர விரும்புவதாகக் கூறினார்.

எல்லைகளைக் கடந்து ஒரு புதிய வடிவத்தில் விரிவான ஆசியாவை உருவாக்கும் திட்டத்தை யதார்த்தமாக்க இந்தியா உதவிட வேண்டும் என்று அபே கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஐ விசாரணை: விஜய்க்கு பதிலா ஆஜராகப்போவது அவரா?!.. அரசியல் பரபர!...

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலா? பரபரப்பு தகவல்

கடந்த ஆண்டு ஏன் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை? பொங்கல் பரிசு குறித்து சீமான் கேள்வி..!

கம்யூனிஸ்ட் தவிர யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இருந்து மாறலாம்.. ஜனவரி இறுதியில் தான் தெரியும்..

திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்துவிட்டது.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்..

Show comments