இடைத் தேர்தல் வராது : ஜோதி பாசு!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (14:16 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு பிரச்சனையில் இடதுசாரிகளுக்கும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே நிலவிவரும் எதிரெதிரான நிலைப்பாட்டால் நாட்டில் மீண்டும் ஒரு தேர்தல் வருவதற்கான சாத்தியமில்லை என்று ஜோதி பாசு கூறியுள்ளார்!

அணு சக்தி ஒப்பந்தத்தை வாக்கெடுப்பற்ற நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்ட முறையில் நாடாளுமன்றஙத்தில் விவாதத்தை நடத்த வேண்டும் என்று கூறிய மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதி பாசு, இந்தப் பிரச்சனையால் நாட்டில் ஒரு தேர்தல் வர வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுத்தாலும், கடுமையான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எச்சரித்துள்ள நிலையில், அரசிற்கு அளித்துவரும் ஆதரவு தொடரும் என்பது போல, இடைத் தேர்தல் வராது என்று மூத்த தலைவர் ஜோதி பாசு கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரு விஷப்பாம்பு.. மல்லிகார்ஜுன கார்கே கருத்து.. அமித்ஷா கொடுத்த பதிலடி..!

அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் Rice Beer.. en Z மத்தியில் பிரபலமாகி வருவதால் பரபரப்பு..!

இன்று இரவு யாரும் ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை:

இனிமே வருஷத்துக்கு 2 முறை மட்டுமே CA தேர்வு!.. ICAS அதிரடி அறிவிப்பு..

ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரீசலனை நிறுத்தம்!.. காரணம் என்ன?..

Show comments