எதிர்ப்பை மீறி அணு ஒத்துழைப்பை முன்னெடுத்தால்... : ஏ.பி. பரதன்!

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2007 (17:55 IST)
இடதுசாரிகளின் எதிர்ப்பை மீறி இந்திய-அமெரிக்க அணு ஒத்துழைப்பை மத்திய அரசு முன்னெடுத்தால் அதற்கு அரசியல் ரீதியாக 'பெரும் விலை' கொடுக்க வேண்டியிருக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்!

இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கட்சிகள் நிராகரித்துள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன் இவ்வாறு கூறியுள்ளார்.

அணு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கும் போதுதான், அமெரிக்காவுடனான அணு ஒத்துழைப்பிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளும் என்று கூறிய பரதன், நாளை நடைபெறவுள்ள இடதுசாரி கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து திடமான முடிவு எட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments