Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் மழையால் பல பகுதி துண்டிப்பு : 223 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2007 (15:22 IST)
பீகாரில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழைக்கு இதுவரை 223 பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலப் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பீகார் மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களுக்கு இதுவரை 223 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை வெள்ள சேதங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் டில்லி சென்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments