அசாமில் மேலும் 4 ஹிந்தி பேசும் மக்கள் சுட்டுக்கொலை

Webdunia
அசாமில் கடந்த 3 நாட்களில் ஹிந்தி பேசும் மக்கள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் நேற்றிரவு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

அசாம் மாநிலத்தில் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஹிந்தி மொழி பேசும் குடும்பத்தினர் வாழும் வீடுகளின் மீது தீவிராவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்றிரவு உல்பா, கர்பி லாங்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹிந்தி பொழி பேசும் மக்கள் 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்தும், தீவிராவாதிகளை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் அசாம் மாநிலத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்ததாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

டெல்லி போய்விட்டு வந்ததும் இன்னொரு மாநாடு.. சென்னையில் நடத்த விஜய் திட்டமா?

Show comments