சஞ்சய் தத் பிணைய மனு : மபுகவிற்கு தாக்கீது

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (15:04 IST)
மும்பை குண்டு வெடிப்பில் குற்றவாளி என்று தீர்ப்பாகி சிறைச்சாலையில் உள்ள சஞ்சய் தத் தாக்கல் செய்துள்ள பிணைய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

பிணைய மனு மீதான அவசர விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன் மனு மீது விளக்கம் அளிக்க முன் வந்தார்.

ஆனால், "தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் வரும் 20ஆம் தேதி விசாரிப்போம்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துவிட்டார்.

சீரான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் நீதிபதி கூறினார்.

1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாகக் கூறி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய்!.. இனிமே ரேட் அதிகம்!.. நேரம் பார்த்து காலை வாரும் ரஷ்யா!..

மினிமம் பேலன்ஸ் இல்ல!. மக்களிடமிருந்து 19 ஆயிரம் கோடி அபராதம்!...

எல்லாத்தையும் விட்டு வந்துட்டேன்!.. இனிமே அரசியல்தான்!.. வேட்பாளர்களிடம் உருகிய விஜய்!..

சென்னை முடியாது.. டெல்லிக்கு வாங்க!. விஜயை விடாம விரட்டும் சிபிஐ!...

மம்தா பானர்ஜியின் Fake News Factory உருவாக்கிய வதந்தி.. ஜனாதிபதி குறித்த வதந்திக்கு பாஜக பதிலடி..!

Show comments