Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆறுகளை பாதுகாக்க: மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (10:59 IST)
தேசிய ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காவிரி, வைகை, கூவம், தாமிரபரணி உள்ளிட்ட 34 ஆறுகளை பாதுகாக்க ரூ. 4,783 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் சுமார் 160 நகரங்கள் வழியாக பாயும் 34 ஆறுகளை பாதுகாக்க தேசிய ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

இத்திட்டதின்படி, தற்போது சென்னையில் உள்ள கூவம், திருச்சியில் உள்ள காவிரி, மதுரையில் உள்ள வைகை, நெல்லையில் உள்ள தாமிரபரணி உள்ளிட்ட 34 ஆறுகளை பாதுகாக்க ரூ 4,783 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்றுநீர் மாசுபடுவதைத் தடுத்துச் சுத்தப்படுத்தி அதை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சென்னை அடையாறு கூவம் ஆற்றை பாதுகாக்க ரூ.491 கோடியும், காவிரி ஆற்றுக்கு ரூ. 3008 கோடியும், மதுரை வைகை ஆற்றை பாதுகாக்க ரூ.165 கோடியும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க ரூ. 66 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments