தமிழக ஆறுகளை பாதுகாக்க: மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (10:59 IST)
தேசிய ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காவிரி, வைகை, கூவம், தாமிரபரணி உள்ளிட்ட 34 ஆறுகளை பாதுகாக்க ரூ. 4,783 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் சுமார் 160 நகரங்கள் வழியாக பாயும் 34 ஆறுகளை பாதுகாக்க தேசிய ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

இத்திட்டதின்படி, தற்போது சென்னையில் உள்ள கூவம், திருச்சியில் உள்ள காவிரி, மதுரையில் உள்ள வைகை, நெல்லையில் உள்ள தாமிரபரணி உள்ளிட்ட 34 ஆறுகளை பாதுகாக்க ரூ 4,783 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்றுநீர் மாசுபடுவதைத் தடுத்துச் சுத்தப்படுத்தி அதை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆற்றுநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சென்னை அடையாறு கூவம் ஆற்றை பாதுகாக்க ரூ.491 கோடியும், காவிரி ஆற்றுக்கு ரூ. 3008 கோடியும், மதுரை வைகை ஆற்றை பாதுகாக்க ரூ.165 கோடியும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க ரூ. 66 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரு விஷப்பாம்பு.. மல்லிகார்ஜுன கார்கே கருத்து.. அமித்ஷா கொடுத்த பதிலடி..!

அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் Rice Beer.. en Z மத்தியில் பிரபலமாகி வருவதால் பரபரப்பு..!

இன்று இரவு யாரும் ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை:

இனிமே வருஷத்துக்கு 2 முறை மட்டுமே CA தேர்வு!.. ICAS அதிரடி அறிவிப்பு..

ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரீசலனை நிறுத்தம்!.. காரணம் என்ன?..

Show comments