Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பேருந்தில் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி

Webdunia
திங்கள், 30 ஜூலை 2007 (10:27 IST)
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்ததில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலியாயினர்.

காஷ்மீர் மாநிலத்தில் ஷாலிமரில் உள்ள மொஹல் பூங்கா அருகே சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த பேருந்தில் நேற்று திடீரென குண்டு வெடித்தது. பேருந்தில் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருந்த கம்பிரஸரில் ஏற்பட்ட கோளாரால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், வெடி பொருள்கள் வெடித்ததுதான் விபத்திற்கு காரணமாக இருக்க முடியும் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments