Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா துப்பாக்கிச் சூடு : அறிக்கை அளிக்க சோனியா உத்தரவு

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2007 (12:19 IST)
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஏழைகளுக்கு இலவசமாக நிலம் வழங்க கோரி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்பிக்கும்படி ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியை, காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்க கோரி, கடந்த சில மாதங்களாக அங்குள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கவும், நிலச் சீர்திருத்த அமலாக்க ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரியும் நேற்று மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு இடது சாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

நேற்றைய கடையடைப்பு போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. கம்மம் மாவட்டத்திலுள்ள முடிகோண்டா கிராமத்தில் கலவரத ்தை கட்டுப்படுத்த காவல் துறையி னர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். இதனால், மாநிலத்தில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. கலவரம் ஏதும் நிகழாமலிருக்க அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்பிக்கும்படி ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியை, காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், மாநில அரசைக் கண்டித்து, இன்று ஒருநாள் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments