Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2007 (18:00 IST)
பீகாரில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கங்கா, பாக்மதி, பூரி, சிடமார்ஹி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏறபட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக முஷாப்பர்பூர், சகர்சா, சுபாயுல், மதுபாணி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் பேருந்து போக்கு வரத்தும் பல பகுதிகளில் தடைபட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் இதுவரை வெள்ளப் பெருக்கிற்கு 14 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments