Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் கட்டடம் இடிந்து 21 பேர் பலி

Webdunia
வியாழன், 19 ஜூலை 2007 (11:50 IST)
மும்பையில் நேற்று 6 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 21 பேர் பலியாயினர்.

மும்பையில் போரிவல்லி பகுதியில் லட்சுமி சாயா என்ற அடுக்குமாடி கட்டடம் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்த கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டடத்தில் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக உயர்ந்துள்ளது மேலும், பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கி இருந்த 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments