Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைக் கழக ஆசிரியராகிறார் கலாம்

Webdunia
புதன், 18 ஜூலை 2007 (12:07 IST)
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியை தொடங்குகிறார்.

குடியரசுத் தலைவர் பதவிலிருந்து ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்கு திரும்புவேன் என்று அப்துல் கலாம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது பதவிக்கலாம் வருகிற 24 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

இதனையடுத்து, வருகிற 25 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கௌரவ பேராசிரியராக அப்துல் கலாம் பொறுப்பேற்கிறார். இதனை நேற்று அப்துல் கலாம் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments