Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு பிரச்சனை: பேச்சு வார்த்தைக்கு தயார்: கேரளா அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2007 (18:18 IST)
முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண தயாராக இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இதனை திட்டவட்டமாக மறுத்து வந்த கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கேரள சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றிக்கு பதிலளித்த கேரள நீர் வளத்துறை அமைச்சர் ஹேமச்சந்திரன், முல்லை பெரியாறு அணையின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசுக்கு மூன்று முறை தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் அவர்களிடம் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தெரிவித்த அவர், இதற்கு தீர்வு காண தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த கேரள அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments