Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு துணை தலைவர் தேர்தல்: ரஷீத் மசூத் 3 வது அணி வேட்பாளர்

Webdunia
திங்கள், 16 ஜூலை 2007 (19:09 IST)
PIB PhotoPIB
குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் மசூத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பைரோன் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும், குடியரசு துணை தலைவர் தேர்தலில் தங்கள் கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் என ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத மசூத் போட்டியிடுவார் என அக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான சமாஜ் வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் இன்று அறிவித்துள்ளார்.

குடியசுத் துணை தலைவர் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 3 வது அணி மட்டுமே வேட்பாளரை அறிவித்திருப்பது குறிப்பிடதக்கதாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments