Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஏவுகணைத் திட்டம் : ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2007 (20:58 IST)
நமது நாட்டின் விமானப் படையின் வல்லமையை பலப்படுத்த தரையில் இருந்து விண் இலக்குகளைத் தாக்கவல்ல புதிய தலைமுறை இடைத்தூர ஏவுகணை உருவாக்கும் ரூ.10,000 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது!

தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த இடைத்தூர ஏவுகணைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தரையில் இருந்து 70 கி.மீ. வரையிலான விமானம் உள்ளிட்ட விண் இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணையை உருவாக்கும் திட்டத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியுள்ளது.

தற்பொழுது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெக்கோரா ஏவுகணைகளை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. அதற்கு மாற்றாகவே இந்த புதிய தலைமுறை இடைத்தூர ஏவுகணையைத் தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.

இந்த ஏவுகணையை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமும், இந்திய விமானப்படையும் உருவாக்கவுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments