Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் கன மழைக்கு: 98 பேர் பலி

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (20:44 IST)
குஜராத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளனர். மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பதான் பகுதியில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 380 மி.மீ. மழை பெய்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழைக்கு இதுவரை 98 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி அவசரமாக இன்று அகமத ாபாத் திரும்பினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், பின்னர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments