Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு பரிசீலனை தொடங்கியது

Webdunia
திங்கள், 2 ஜூலை 2007 (13:16 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. பிரதீபா பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் கட்சி சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் பைரோன் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி, இன்று மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதுவரை 84 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதீபா பாட்டீல், ஷெகாவத் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்ப பெற ஜூலை 4ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments