Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது

Webdunia
சனி, 30 ஜூன் 2007 (17:02 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, வருகிற ஜூலை 19 ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் சுயேட்சையாக ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இதுவரை 51 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் பரிச ீல ிக்கப்படுகின்றன. பிரதீபா பாட்டீல ், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோரின் வேட்புமனுக்கள் தவிர மற்றவை நிராகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, சென்னையில் நாளை நடைபெறும் மகளிர் பேரணியில் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்கிறார். இதையடுத்து, அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments