Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரதீபாவை விலக்க அத்வானி கோரிக்கை

Webdunia
சனி, 30 ஜூன் 2007 (11:26 IST)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலின் வேட்புமனுவை விலக்கிக் கொண்டு, வேறு வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொலை வழக்கு ஒன்றில் பிரதீபா பாட்டீலின் சகோதரருக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பெண் புகார் கூறியிருப்பதையும், கூட்டுறவு வங்கியில் அவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகாரையும் சுட்டிக்காட்டினார்.

பொது வாழ்வில் ஈடுவடுபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் நாட்டின் உயர்ந்த பதவிக்கு தகுதியற்றவர் என்றும் அத்வானி தெரிவித்தார்.

ஜூலை 4 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுவை விலக்கிக் கொள்ள கடைசி நாள் என்பதால், அதற்குள் பிரதீபா பட்டீலுக்கு பதிலாக வேறு யாரையாவது காங்கிரஸ் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அப்போது வலியுறுத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments