Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011ல் இந்தியாவிற்கு ஈரானில் இருந்து சமையல் எரிவாயு!

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2007 (16:29 IST)
இந்தியாவிற்கு பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் சமையல் எரிவாயுவை அளிப்பது தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ள ஈரான், 2011 ஆம் ஆண்டு முதல் நாள் ஒன்றிற்கு 3 கோடி கன மீட்டர் எரிவாயுவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது!

ஈரான் - இந்தியா எரிவாயு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக டெல்லி வந்துள்ள ஈரான் அரசின் பெட்ரோலிய அமைச்சரின் சிறப்பு பிரதிநிதி கானிமி ஃபாத், இந்திய பெட்ரோலிய அமைச்சக செயலர் எம்.எஸ். சீனிவாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் 2011 ஆம் ஆண்டு முதல் ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் 30 மில்லியன் கன மீட்டர் சமையல் எரிவாயு வழங்கப்படும் என்றும், அதன் விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு 0.6 முதல் 0.7 டாலராக இருக்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வணிக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், ஜூலை மாத இறுதியில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமைச்சரவை மட்ட பேச்சுவார்த்தையில் இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்று சீனிவாசன் கூறினார். (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments