Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகாலாந்தில் லேசான நில அதிர்வு

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (12:00 IST)
நாகாலாந்தின் திமாப்பூர் பகுதியில் நேற்று இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நாகாலாந்தின் வர்த்தக நகரமான திமாப்பூரில் நேற்று இரவு 11.38 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஒரு சில விநாடிகள் நீடித்த இந்த நில அதிர்வு நகர் முழுவதும் உணரப்பட்டுள்ளது.

கட்டடங்களும், வீடுகளும் அதிர்ந்தன. ஜன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டன. எனினும் வேறு எந்த சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதற்கான தகவல்கள் இல்லை.

நாகாலாந்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் முதல் நில அதிர்வு இது என்பது குறிப்பிடத் தக்கது. நாகாலாந்து பூகம்பம் ஏற்படக் கூடிய வாய்ப்பு குறைந்த இடம் என்று பூகம்பம் தொடர்பான அறிவியல் மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
( யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

Show comments