Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாமிற்கு ஆதரவு இல்லை : சிவ சேனா!

Webdunia
புதன், 20 ஜூன் 2007 (14:40 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் 3-ம் அணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடுவதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் உள்ள சிவ சேனா கலாமிற்கு ஆதரவளிக்க மறுத்துள்ளது!

சிவ சேனா கட்சியின் 41-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை 2வது முறையாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை சிவ சேனா விரும்பவில்லை என்று கூறினார்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மொஹம்மது அஃப்சல் குருவின் கருணை மனு மீது எவ்வித பதிலும் தராமல் கடந்த அக்டோபர் முதல் கிடப்பில் வைத்துள்ள அப்துல் கலாம், மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வதற்கு ஆதரவளிக்க முடியாது என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.

மொஹம்மது அப்சல் குருவின் கருணை மனு, உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பட்டீலிடம் உள்ளது என்றால், அவ்வளவு காலத்திற்கு அங்கு இருக்க வேண்டிய காரணம் என்ன என்றும் பால் தாக்கரே வினவினார்.

இப்படிப்பட்ட தாமதங்கள் இருக்குமானால், குடியரசுத் தலைவர் என்கின்ற பதவி எதற்கு என்று கேள்வி எழுப்பினார் பால் தாக்கரே. (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

Show comments