Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாமை அனைவரும் ஆதரித்தால் விலகத் தயார் : செகாவத்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2007 (10:42 IST)
குடியரசுத் தலைவர ் தேர்தலில் அப்துல் கலாமை அனைவரும் ஆதரித்தால், போட்டியில் இருந்து வில கத ் தயார் என்ற ு, தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர ் ச ெகாவத் அறிவித்திருக்கிறார்.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வர ும ் ஜுலை 19-ந்தேதி நடைப ெற உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதீபா பட்டீல் குடியரசுத ் தலை வர் தேர்தலுக்கா ன வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர ்கட்சியா ன தேசிய ஜனநாய க கூட்டணி சார்பிலும் இந்த தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. மாறாக, மாற்று அணியின் ஓட்டுகளையும் ஈர்ப்பதற்காக சுயேச்சையாக போட்டியிடும ் குடியரசுத ் துணைத் தலைவர் செகாவத்தை ஆதரிப்பது என்று நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், 8 கட்சிகளை கொண்ட 3 வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில ், குடியரசுத ் தலைவர் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும்படி தற்போதைய குடியரசுத ் தலைவர் அப்துல் கலாமை கேட்டுக்கொள்வது என்றும் அவரை அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க முன்வர வேண்டும் என்றும் முட ிவெடுக்கப்பட்டது.

அப்துல் கலாம் பெயர் புதிய கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் கட்சி சார்பில் கலாமிற்க ு ஆதரவு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தங்களது முடிவில் மாற்றமில்லை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சதுர்வேதி திட்டவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான செகாவத் நேற்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய குடியரசுத ் தலைவர் அப்துல் கலாமை குடியரசுத ் தலைவர் வேட்பாளராக அறிவிப்பதில் ஒருமித்த கருத்து ஏற் பட்ட ு, அனைவரும் ஆதரவு அளித்தால், தேர்தலில் இருந்து தான் மகிழ்ச்சியுடன் விலகிக்கொள்வதாக குறிப்பிட்ட ுள்ளார்.

குடியரசுத ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அப்துல் கலாம் ஒப்புக் கொண்டால ் எனக்கு அதைவிட மகிழ்ச்சியானத ு வேறு எதுவும் இருக்க முடியாது. அதற்க ு அனைத்து கட்சிகளின் ஆதரவு அவசியம ் என்றும் செகாவத் குறிப்பிட ்டிருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments