Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சினைக்கு சமாஜ்வாடி முடிவு

Webdunia
திங்கள், 18 ஜூன் 2007 (11:03 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்த சமாஜ்வாடிக் கட்சி, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளரையும் ஆதரிக்கப்போவதி்ல்லை என்று முடிவு செய்துள்ளது.

உ.பி. தலைநகர் லக்னோவில் நேற்று இரவு சமாஜ்வாடிக் கட்சி தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக உட்பட மதவாத கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றிற்கு எதிராக 3வது ஆணியால் வேட்பாளரை நிறுத்தி பலமான போட்டியை அளிக்க சாத்தியமில்லாததால் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்றும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் இன்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் 3வது அணி கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ள நிலையில் சமாஜ்வாடி கட்சி இவ்வாறு முடிவெடுத்துள்ளது என்றாலும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சிகளின் தலைவர்கள் முலாயம் சிங் யாதவிற்கு அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு அதிகாரம் அளித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments