Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 10 இந்தியர்கள் விடுதலை: மீண்டும் 2 இந்தியர்கள் கடத்தல்

Webdunia
சனி, 16 ஜூன் 2007 (12:06 IST)
நைஜீரியாவில் கடத்தி செல்லப்பட்ட 10 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று நள்ளிரவு 2 இந்தியர்கள் நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 1 ஆம் தேதி நைஜீரியாவில் உள்ள இந்தோனிஷிய நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்கள் 10 பேரை, ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் கம்பெனி மேலாளர் அருண் தனேஜா என்பவரும் ஒருவர்.

கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மேலும், இந்தோனிஷிய கம்பெனி சார்பில் இயக்குனர் மட்டத்திலான அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, கடத்தப்பட்ட 10 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்றிரவு நைஜீரியாவில் 2 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments