Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : 2 பேர் பலி, 42 பேர் காயம்!

Webdunia
புதன், 13 ஜூன் 2007 (19:07 IST)
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி அருகே உள்ள சந்தை ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 சிறுவர்கள் உட்பட 42 பேர் காயமுற்றனர்!

புல்லுட் என்ற இடத்தில் உள்ள சந்தையில் சைக்கிள் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாகவும், அந்த இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொருவர் உயிரிழந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமுற்ற 42 பேரில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவித்துள்ள காவல் துறையினர், இத்தாக்குதலை உல்ஃபா நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். (பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments