Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : 13 பேர் படுகாயம்!

Webdunia
அஸ்ஸாம் மாநிலம் பன்கைகான் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்!

அஸ்ஸாம் மாநிலம் பன்கைகான் பகுதியில் பக்லதன் மார்க்கெட் உள்ளது. இப்பகுதி அருகே ரயில்வே கேட் மற்றும் அதிகளவில் கடைகள் இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். உல்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேபோல், கவுகாத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

Show comments