Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுரேனிய சுரங்கம் : முதலீடு செய்ய ஆஸ்திரேலியா விருப்பம்

Webdunia
மெகாலியாவில் சுரங்கம் அமைத்து யுரேனியம் தோண்டி எடுக்கும் திட்டத்தில் முதலீடு செய்து தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய தூதர் தெரிவித்துள்ளார்.

மெகாலியா மாநிலத்திலுள்ள காசி மலைத் தொடர் பகுதியில் ஏராளமான யுரேனிய வளம் உள்ளது. அங்கு கைலங்க்-பின்டங்க சோஹியான் என்ற இடத்தில் சுரங்கம் அமைத்து யுரேனியத்தை வெட்டி எடுக்கும் திட்டத்தை மெகாலியா அரசும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய யுரேனிய கழகம் முடிவு செய்து உள்ளன.

இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியா விரும்புகிறது என்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஜான் பிலிப் மெக்கார்த்தி யு.என்.ஐ செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

யுரேனியம் நிலக்கரி ஆகியவற்றை தோண்டி எடுப்பதில் தங்களுடைய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக கூறிய கார்த்தி இந்தியா அழைத்தால் முதலீடு செய்ய முன்வருவோம் என்று கூறினார்.

இது தொடர்பாக ஹில்லாங் வந்துள்ள மெக்கார்த்தி மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷியையும் தலைமை செயலர் ரஞ்சித் சட்டர்ஜி சந்தித்து பேசியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

Show comments