Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : 13 பேர் படுகாயம்!

Webdunia
அஸ்ஸாம் மாநிலம் பன்கைகான் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்!

அஸ்ஸாம் மாநிலம் பன்கைகான் பகுதியில் பக்லதன் மார்க்கெட் உள்ளது. இப்பகுதி அருகே ரயில்வே கேட் மற்றும் அதிகளவில் கடைகள் இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். உல்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேபோல், கவுகாத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments