Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற அவைகள் காலவரையின்றி தள்ளிவைப்பு!

Webdunia
பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் இயங்கவிடாமல் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும், ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் தொடர்ந்து செயல்பட்டதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டன!

மாநிலங்களவை காலவரையின்றி தள்ளிவைப்பது குறித்து கவலை தெரிவித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தாங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை உறுப்பினர்கள் மறந்துவிட்டதன் காரணமாக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் ஒவ்வொரு நாளும் முடக்கப்பட்டதாகக் கூறினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எல்லாவற்றையுமே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் நடந்தவைகள் குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறிய மன்மோகன் சிங், எதிர்வரும் மழைக்காலக் கூட்டத் தொடராவது அமைதியான சூழலில் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதேபோல, மக்களவையும் இன்று காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

Show comments