Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் மசூதியில் குண்டு வெடித்தது : 5 பேர் பலி! பலர் படுகாயம்!

Webdunia
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உலகப் புகழ்பெற்ற சார்மினார் அருகேயுள்ள பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் என்ற மசூதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமுற்றனர்!

வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் மசூதியில் திரண்டிருந்த நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. காயமுற்ற அனைவரும் அருகில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர காவல் துறையின் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தால் வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க ஹைதராபாத் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமையை மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

Show comments