அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பதால், அப்போது யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. தற்போது, இந்த கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள நீருற்றுகள் போன்றவற்றால், கீழ் தளத்தில் குடியிருப்பவர்களுக்கு நிறைய பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன.
கட்டடத்தில் தண்ணீர் கசிவதாக புகார் தெரிவித்தனர். இந்த கட்டடத்தில் குடியிருப்பவர்கள் அளித்த புகாரின் காரணமாக, செயற்கை மலையை, இரண்டு வாரத்துக்குள் இடிக்கும்படி, நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இது போன்ற கட்டடத்தை வடிவமைக்க, ஜாங் பிகுங், உரிய அனுமதி பெறவில்லை என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.