ஆப்கான் பெண் ஒருவரது மூக்கு மற்றும் காதுகளை தாலிபான் அமைப்பை சேர்ந்த அவரது கணவர் அறுத ்துள்ளது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் தற்போது மூக்கு மற்றும் காதுகள் பொருத்தப்பட்டுள்ளது.
ஆப்கானை சேர்ந்தவர் அலிஷா, தந்தை வாங்கிய கடனை திருப்பி தர முடியாத ஒரு சூழலில் பணத்திற்கு பிணையாக தாலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு அலிஷாவை அவரது 12 வயதிலேயே தருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் பல கொடுமைகளுக்கு அலிஷா உட்படுத்தப்பட்டார், பெண் என்ற காரணத்தால் பல பிரச்சனைகளை அவர் சந்தித்துள்ளார். இதன் உச்சமாக அவரது இரண்டு காதுகள் மற்றும் முக்கும் அறுக்கப்பட்டது. இந்த கொடுமையை டைம்ஸ் நாளிதழ் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை என்று செய்தி வெளியிட்டது.
இதனை அடுத்து அலிஷாவுக்கு இதன் மூலம் பல நிதி உதவிகள் குவிந்தன. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் அவருக்கு மூக்கு மற்றும் காதுகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஆப்கான் பெண் தற்போது புது முகம் பெற்றுள்ளார்.