Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்களை கொடூரமாக கொன்ற தாலிபான்கள்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2012 (13:54 IST)
தாங்கள் கடத்திச் சென்ற பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் 15 பேரை கொன்று விட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியிலிருந்து கடந்த மாதம் கடத்தப்பட்டவர்களாவர்.

இவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாக தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஷனுல்லா இஷான் தெரிவித்துள்ளார்.

கைபர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இத்தகவலைத் தெரிவித்த அவர், கொல்லப்பட்டவர்களது சடலம் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் வீசப்பட்டுவிட்டன என்றார்.

இருப்பினும் இஷானின் இந்த அறிவிப்பை தலிபான் அமைப்பின் தலைமை உறுதி செய்யவில்லை. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி இராணுவத்துக்கு எதிராக தலிபான் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 15 பாதுகாப்புப் படையினரைக் கடத்திச் சென்றனர்.

தாலிபான்களின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் இராணுவத்துக்கும், தாலிபான் அமைப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments