Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கான்: நேட்டோ தலைமையகம் அருகே தாக்குதல்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2011 (17:07 IST)
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின தலைமை அலுவலகத்தை குறிவைத்து இன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம்,அதனை அடுத்து அமைந்துள்ள நேட்டோ தலைமையகம் மற்றும் இன்ன பிற வெளிநாட்டு உளவு ஏஜென்சிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள நிலையில், அவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் இந்த தற்கொலை தாக்குதல் நடைபெற்றதாகவும்,அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாகவும் தாக்குதல் நடத்திய தீவிரவாத குழு ஒன்றின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே காபூலில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டையும் நடந்தது.இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments