Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கைது

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (11:49 IST)
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புட‌ன் தொடர்புடைய பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தில் பணியாற்றிவந்த பிரிகேடியர் ஒருவர் கைது செய்யப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல் பிரிகேடியர் அலி கான் கைது செய்யப்பட்டு இராணுவ உயர் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாக தலைமை இராணுவ செய்தித்தொடர்பாளர் ஜெனரல் அத்தர் அப்பாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கான் கைது செய்யப்பட்டதை பிபிசி உருது தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது. ,ராணுவ தலைமையகத்தின் ஒழுங்குமுறை இயக்குநரகத்தில் 2 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்துள்ளார். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமாகி விட்டதாக அந்த தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

பயங்கரவாத அமைப்புடன் கானுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அப்பாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விரிவான விவரங்களைத் தர மறுத்துவிட்டார். அது மக்களை பாதிக்கக்கூடும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

பலுசிஸ்தானில் ஷாம்ஸி விமானதளம் மீதான தாக்குதலின் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்ட தடைசெய்யப்பட்ட ஹிஜ்ப் உத் தெஹ்ரீர் அமைப்புடன் அலி கானுக்கு தொடர்புள்ளதாக குற்றம்சாப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Show comments