Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபுகுஷிமா நிலை மிகவும் ஆபத்தானது: அணு சக்தி முகமை

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2011 (14:43 IST)
பூகம்பத்தாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையாலும் செயலிழந்த ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் கூறியுள்ளார்.

நய்ரோபியில் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் யூகியோ அமனோ, ஆபத்தான இந்த நெருக்கடியை ஜப்பான் தனியாக சந்நதிக்கவில்லையென்றும், அதோடு உலக நாடுகள் அனைத்தும் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

அணு உலைகள் செயலிழந்ததால் நிகழ்ந்துவரும் அணுக் கதிர் வீச்சை கட்டுப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமைக்கு அனைத்து உதவிகளும் செய்ய ஐ.நா.தயாராக உள்ளது என்று பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளதாகவும் அமனோ தெரிவித்துள்ளார்.

மார்ச் 11ஆம் தேதி ஏற்பட்ட ரிக்டர் 9.0 புள்ளி பூகம்பத்தினாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட 14 மீட்டர் உயர ஆழிப்பேரலைத் தாக்குதலிலும் ஃபுகுஷிமா மாகாணத்திலுள்ள டாய்ச்சி அணு மின் நிலையத்திலுள்ள 5 அணு மின் உலைகளும் செயலிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments